Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி எடுக்க சென்று காட்டுக்குள் சிக்கிய இளைஞர்: துரத்தி சென்ற காட்டு மிருகம்!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (15:38 IST)
செங்கோட்டை பகுதியில் செல்பி எடுக்க காட்டுக்குள் சென்ற இளைஞரை காட்டு மிருகம் துரத்தியதால் அவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக – கேரள எல்லைப்பகுதியான புளியரை பகுதி அடர்ந்த மலைக்காட்டு பகுதியாகும். பல்வேறு காட்டு மிருகங்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் கோட்டயம் பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பவர் தனது நண்பருடன் மோட்டார் வாகனத்தில் பயணித்துள்ளார். செல்பி எடுக்க விரும்பி காட்டு பகுதிக்குள் சென்ற அவர்களை காட்டு மிருகம் ஒன்று துரத்தியுள்ளது.

இதனால் இருவரும் காட்டு பகுதிக்குள் பிரிந்து ஓடியுள்ளனர். அதில் சுமேஷ் வந்த பாதையை மறந்து காட்டிற்குள் சிக்கியுள்ளார். காட்டு மிருகங்களுக்கு பயந்து மரத்தின் மேல் ஏறிய சுமேஷ் செல்போன் மூலம் காவல் நிலையத்தின் உதவியை நாடியுள்ளார். காட்டுக்குள் தேடிய காவல்துறையினர் சுமேஷை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர்.

பிறகு அந்த காட்டுப்பகுதியில் வாழும் மக்கள் சுமேஷை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். சுமேஷை கண்டுபிடித்த மக்களுக்கு அவரது பெற்றோர்கள் நன்றி கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments