Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து!

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (19:34 IST)
சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் பாலப் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை- வேளச்சேரி- பரங்கிமலை இணைக்கும் பறக்கும் ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று, ஆதம்பாக்கம் தில்லை  கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானது.

கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி இடிந்து,  விழுந்து ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானது.

இரு தூண்களுக்கு இடையே 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விழுந்து விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை ; இவ்விபத்து பற்றி ஆதம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆதம்பாக்கம் தில்லை  கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானதால், அப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

12 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை.! கல்லால் அடித்துக் கொன்ற தந்தை கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments