Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை அணையிலிருந்து வெளியேறும் 6000 கன அடி வெள்ளநீர்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (17:56 IST)
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக வைகை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தான் வெள்ள நீர் வெளியேற்றப்படுவதாகவும் எனவே மதுரை உள்பட வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரி மதுரை மாவட்ட பொது மக்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வைகை கரையில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வைகை கரையோரம் இருக்கும் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments