Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை: நிரந்தர தீர்வுகாண கி.வீரமணி வலியுறுத்தல்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2015 (11:45 IST)
தமிழக மீனவர்களுக்கு, இலங்கை அரசு விதித்திருக்கும் அபராத தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
நமது தமிழ்நாட்டு மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரத்தை அன்றாடம் பறித்து, ஏதோ ஒரு சாக்குக்கூறி, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும், அவர்களை சிறையில் அடைப்பதும், பிறகு கொஞ்ச காலம் கழித்து, இந்திய அரசினரின் கோரிக்கையை ஏற்று அவர்களை மட்டும் (படகுகளை திருப்பித் தராமல்) விடுதலை செய்வதுமான வாடிக்கையான வேடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இலங்கை அரசு.
 
இது தவிர, கடலில் மீன்பிடிக்கும்போது, அவர்களது எல்லைக்கு சென்றால் 15 கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் கூறுகிறார்கள்.
 
பக்கத்து அண்டை நாடு எதிலும்கூட இதுபோன்ற கருப்புச் சட்டம் போட்டிருப்பதாக தெரியவில்லை.
 
இந்த சட்டத்தை ரத்து செய்ய மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காணவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

Show comments