Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞரின் பேனா.. சிலை எதுக்கு வீணா? மீனவர் கூட்டமைப்பு எதிர்ப்பு! – கருத்து கேட்பில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (13:16 IST)
சென்னை மெரினா கடற்கரையில் கடல் பகுதியில் கலைஞரின் பேனாவுக்கு சிலை அமைப்பதற்கு மீனவ கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை பெரிய அளவில் மெரினா கடற்கரை பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்நிலையில் இன்று பேனா சிலை அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள சின்ன கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல கட்சியினரும், மீனவ கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

ALSO READ: உன்னை போட்டு தள்ள ஒரு ஏவுகணை போதும்! – போரிஸ் ஜான்சனை மிரட்டிய ரஷ்ய அதிபர்!

அப்போது கூட்டத்தில் பேசிய தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் பிரதிநிதி, கடற்கரை மேலாண்மை சட்டம் 2011ன் படி கடலில் பேனா அமைப்பது சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். பேனா சிலை அமைக்கப்பட உள்ள பகுதி முகத்துவார பகுதி என்றும், அங்கு பல்வேறு மீனவ குடியிருப்புகள் உள்ளதாலும், முகத்துவார பகுதிகள் மீன்கள் பெருகி வளரும் பகுதி என்பதாலும் இது மீனவ மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் திட்டமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு கூறியபோது அவரை பேசவிடாமல் கீழிருந்து பலரும் கூச்சலிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #கடலில்பேனா_வேண்டாம் என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments