சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சங்கத்தினர் (சிஐடியு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

J.Durai
புதன், 31 ஜூலை 2024 (15:24 IST)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியில் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் (சிஐடியு) பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் தொழிலாளர்களின் வேலையை அதிகாரிகள் பறிப்பதை கண்டித்தும்,சரவெடி உற்பத்திக்கு அனுமதி வழங்க கோரியும், ஆலை மூடலால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கோரியும், ஆய்வில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதை கண்டித்து வேலை நிறுத்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments