Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சுமெத்தை குடோனில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான மெத்தைகள் எரிந்து நாசம்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (11:57 IST)
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக்(48). இவர் கோவைப்புதூர் அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல அவர் குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். 
 
இந்நிலையில் இன்று காலை குடோனுக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள, மள என எரிய தொடங்கியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மதுக்கரை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். 
 
மேலும் நான்கு தீயணைப்பு வாகனங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சில மணி நேரம் போராடி பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் சில லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மெத்தைகள் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments