Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் தீ விபத்து

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (09:25 IST)
தீபாவளி நாளை கொண்டாடவிருக்கும் நேரத்தில் புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் சென்னை தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவில் குவிந்து வருகின்றனர்.



 
 
இடநெருக்கடியான இந்த இடத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தெருவில் உள்ள முன்னணி ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
 
ஊழியர்களுக்கு இன்று காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிறிது நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த தீவிபத்தால் உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம்

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments