Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சில்க்ஸ் பக்கத்து கடையில் திடீர் தீ விபத்து: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2017 (23:59 IST)
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையின் 7 மாடி கட்டிடத்தில் கடந்த 31ஆம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.





இந்த நிலையில் இன்று மாலை சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள பி.கே.ஆர் என்ற ஓட்டலில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடந்த மூன்று நாட்களாக மூடியிருந்த இந்த ஓட்டலின் சமையலறையில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை சில்க்ஸ் பகுதியில் பணியாற்றி வந்த தீயணைப்புத் துறையினர் , உடனடியாக ஓட்டலில் பற்றிய தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தினால் யாருக்கும் காயம் இல்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னையில் நடைபெற்ற மூன்றாவது தீ விபத்து இதுவாகும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments