Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையை ஏற்படுத்திய வாட்ஸ் அப் உரையாடல்: அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (11:55 IST)
கன்னியாகுமரியில் சாலையோரம் வைக்கப்பட்ட அதிமுக பேனரை அகற்றிய காவல்துறை ஆய்வாளரை செல்போன் மூலம் மிரட்டிய அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சாலையோரம் பிளெக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி காவல்துறை ஆய்வாளர் சாம்சன் அகற்றியுள்ளார். 
 
இந்நிலையில், அந்த ஆய்வாளரை களியக்காவிளை மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலாளர் உதயகுமார் தொலைபேசியில் மிரட்டும் ஆடியோப் பதிவு உரை வாட்ஸ் அப்பிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த அவர் மீது கொலை மிரட்டல், போக்குவரத்திற்கு இடையூறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை அதிமுக கட்சியிருந்து நீக்கப்பட்டதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று அக்கட்சி வட்டாராங்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளத

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments