வேட்புமனுவை வாபஸ் பெற கால அவகாசம் முடிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் வேட்பாளர் பட்டியல்..

Mahendran
சனி, 30 மார்ச் 2024 (15:25 IST)
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து இன்னும் சிறிது நேரத்தில் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது என்பதும் இன்றுடன் வேட்புமனுவை  வாபஸ் பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னம் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ போட்டியிடும் சின்னம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னம் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments