Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்

Webdunia
சனி, 21 நவம்பர் 2015 (02:59 IST)
சென்னை  உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களை மத்திய பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கி இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வருகை தந்த வழக்கறிஞர்களை மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்.
 
அப்போது, பெண் வழக்கறிஞரை சோதனை செய்தனர். மேலும், அவர்களை சோதனை செய்யும் போது, வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வழக்கிஞர்களுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து, வழக்கறிஞர்கள் திடீர் போராடத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் சென்னை  உயர் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments