Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (12:45 IST)
சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பியதாக பெலிக்ஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில்  கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர் வழக்கில் பெலிக்ஸ் சேர்க்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து சமீபத்தில் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார் என்பதும் அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பெலிக்ஸை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் இன்று சோதனை செய்து வருகின்றனர்.

சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டி குறித்து ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவை இருக்கிறதா என்று தேடுதல் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments