Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விற்று லஞ்சம் கொடு! - போலீஸ் தொல்லையால் விவசாயி தற்கொலை

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (01:55 IST)
புகார் கொடுத்ததின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ரூ.10ஆயிரம் லஞ்சம் வேண்டுமென்று காவல் ஆய்வாளர் கேட்டதை அடுத்து விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
மதுரை மாவட்டம் செம்மினிப்பட்டியை சேர்ந்தவர் சின்னயன். இவரது சொந்த வீடு தொடர்பாக இவருக்கும், இவரது தம்பிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், இவருக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.
 
சின்னயன் ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்தி வருவதால் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இது குறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
 
இந்நிலையில், சின்னையனின் தம்பியிடம் விசாரணை மேற்கொள்ள ரூ.10 ஆயிரம் வேண்டுமென்று காவல் நிலைய ஆய்வாளர் கேட்டுள்ளார். பணம் இல்லாவிட்டால், வீட்டை விற்று பணம் கொடு என்று கேட்டிருக்கிறார்.
 
இதில் மனமுடைந்த சின்னயன், வாடிப்பட்டி அண்ணாசிலை முன்பு கடிதம் எழுதிவைத்துவிட்டு பூச்சிமருந்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments