Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பிரபல ரவுடி பப்லுவுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் பிரபல ரவுடி பப்லுவுக்கு போலீஸ் வலைவீச்சு

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2016 (15:15 IST)
சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மாமூல் தராதவர்களை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி பப்லுவை போலீசார் கைது செய்தனர்.
 

 
சென்னை வியாசார்பாடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பப்லு தலைமையிலான ரவுடி கும்பல் ஒன்று இரவு நேரத்தில் பொதுமக்களை தாக்கி வந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகளில் கட்டாய மாமூல் வசூல் செய்தனர்.
 
அப்போது, ஹரி என்பவரின் பஞ்சர் கடையில் மாமூல் கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார். இதனால், அந்தக் கும்பல் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் தீபன், ராஜ்குமார் ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
 
இது குறித்து, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ரவுடி பப்லு தலைமையிலான கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
ரவுடி பப்லு மீது 5 கொலை வழக்கு உள்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments