Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு விலகியதாக வாட்ஸ் அப்ல் தகவல் வெளியாகியது

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2016 (10:14 IST)
தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுக-வில் இணைந்து விட்டனர் என்று வாட்ஸ் அப்பில் தவறான செய்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறி அக்கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி்யுள்ளது.


 

 
உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகி வருகிறது.
 
சென்னையில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுக-வில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் அப்பிலும் தகவல் வெளியாகியது. இதுதொடர்பான செய்திகள் வாட்ஸ் அப்பிலும் பரவியது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேமுதிக நிர்வாகிகள், தேமுதிக தனித்து போட்டியிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். வாட்ஸ் அப்பிலும், சமூக வலைதளங்களிலும் தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments