Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் காதல்; கேரளாவுக்கு ஓடிய இளம்பெண்: வாலிபர் கைது

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2016 (15:06 IST)
திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கேரளாவை சேர்ந்த 25 வயது வாலிபருடன் பேஸ்புக் மூலம் காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் அந்த இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளார்.


 
 
இதனையடுத்து அந்த பெண்ணில் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இளம்பெண் பயன்படுத்திய மொபைல் எண்ணை வைத்து காவல் துறையினர் அந்த பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
 
கேரள மாநிலம் இடுக்கியில் அந்த பெண் குமார் என்ற 25 ஆணுடன் வசித்து வந்துள்ளார். இவர்களை பிடித்து விசாரித்த காவல் துறையினர், அவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் காதலித்து வந்தது தெரியவந்தது.
 
பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி, அடிக்கடி சாட்டிக் செய்து வந்தனர். பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி கடந்த 12 ஆம் தேதி அந்த நபரை காண கேரளா சென்ற அந்த பெண் அவருடனையே வசித்து வந்துள்ளார். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் திருவண்ணாமலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
 
17 வயது இளம்பெண்ணை பெற்ரோருடன் அனுப்பி வைத்த காவல் துறையினர், 25 வயதான அந்த நபரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments