Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவிடம் பணம் வாங்கியது தேமுதிக: போட்டுடைத்த சந்திரகுமார்

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2016 (16:30 IST)
தேமுதிக, திமுக உடன் கூட்டணி அமைக்காமல் மக்கள் நல கூட்டணியுடன், கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் அக்கட்சி மீதும் கட்சி தலைமை மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.


 
 
117 இடங்களை திமுகவிடம் கேட்டு திமுகவின் முக்கிய தலைவர் ஒருவரின் வீட்டுக்கு விஜயகாந்த் நேரடியாக சென்று கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார் என கூறினார் சந்திரகுமார்.
 
மற்றொரு பக்கம் பாஜகவுடன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் அங்கு பேரம் படியாததால் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு போனதாக சந்திரகுமார் குற்றம் சாட்டினார்.
 
இந்நிலையில், தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேடியளித்த சந்திரகுமார் அதிமுகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருப்பதாக அம்பலப்படுத்தினார்.
 
மேலும் கட்சி நலனை பார்க்காமல் குடும்ப நலனை முன்னிறுத்துவதில்தான் பிரேமலதா அக்கறையாக உள்ளார் என கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments