ஈரோட்டில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கடைகள்! – பல லட்சம் பொருட்கள் சேதம்!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (08:58 IST)
ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள சத்தி ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று நள்ளிரவு திடீரென அந்த கடைகளில் ஒன்றான பெயிண்ட் விற்கும் கடை திடீரென தீப்பிடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. இதனால் விடிய விடிய தீ பற்றி எரிந்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் எரிந்து சாம்பலான நிலையில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெனிசுலாஅதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது.. நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு!

மாசடைந்த குடிநீரை குடித்ததால் விபரீதம்.. 10 பேர் பலி.. மருத்துவமனையில் 200 பேர்..!

யார் அடுத்த முதல்வர்?.. கருத்துக்கணிப்பில் பழனிச்சாமியை பின்னுக்கு தள்ளிய விஜய்!...

தமிழ்நாடு, கேரளா தான் முக்கியம்.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்..!

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் புதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments