Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கில் கிடைக்கும் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.. செங்கோட்டையன்

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (11:44 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவுக்கு கிடைக்கும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டை தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் அதிமுகவின் இரு பிரிவுகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் எடப்பாடி பழனிச்சாமி பிரிவு அதிமுக இன்று அல்லது நாளை வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது ஈரோடு கிழக்கு இடைத்தொகைகளில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments