ஓங்கிய எடப்பாடியின் கை... அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (11:39 IST)
கட்சியில் முதல்வர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாக எழுந்த பேச்சால் நேற்று நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மோதல் சூழல். 
 
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுகவில் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இது சம்மந்தமாக சில நாட்களாக சர்ச்சைகள் அதிமுகவில் எழுந்துள்ளன.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போது ”ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே” எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நுழைந்த போது “நிரந்த முதல்வரே” என்றும் கோஷங்கள் எழுப்பட்டது.
 
அப்போதே பிரச்சனை வரும் எதிர்பார்த்த நிலையில், அப்போது அல்லாமல் கட்சியில் முதல்வர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இணைப்பின்போது ஒப்புக்கொண்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் கோரிய போது பிரச்சனை வெடித்துள்ளது. 
 
வழிகாட்டுதல் குழுவை அமைக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருக்கும் முதல்வர் தரப்பினார் ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. மேலும், வரும் 28 ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments