Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்த ஆதரவும் எனக்கே குடுங்க! கட்சிக்குள் ஆதரவு திரட்டும் எடப்பாடியார்!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (12:10 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளருக்காக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கட்சியில் குழப்பங்கள் நிலவுவதால் வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் பணியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments