Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரவுடிகள் அட்டகாசம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

Siva
திங்கள், 10 ஜூன் 2024 (15:17 IST)
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரவுடிகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரௌடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
 
போதை பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில் பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ரவுடி கும்பல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது என்பதும் இதில் மருத்துவமனையில் உள்ள பல உபகரணங்கள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments