Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேற வழி இல்ல.. பக்கத்துல உக்காருவோம்! – ஓ.பன்னீர்செல்வம் அருகில் எடப்பாடியார்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (10:31 IST)
தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அருகே எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.

அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவிய நிலையில் அதிமுக நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பொதுக்குழுவின் முடிவை ஏற்காத ஓ.பன்னீர்செல்வம் இன்னமும் தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே குறிப்பிட்டு வருகிறார்.

கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தின்போது துணை எதிர்கட்சி தலைவர் என்ற பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுவிட்டதாக சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். ஆனாலும் சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்தார். சமீபத்தில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டிஸிலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் பதவிகள் குறிப்பிடப்பட்டதால் அந்த கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பியது.

ஆனால் இந்த முறையும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வமே இடம்பெற்றுள்ளார். எனினும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் அருகே அமர்ந்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments