Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இறுதி சடங்கிற்கான பணம் பீரோவில் உள்ளது’ - மாணவி, தாத்தா தற்கொலை

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (21:05 IST)
இறுதி சடங்கிற்கான பணம் பீரோவில் உள்ளது என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி ஒருவர் தனது தாத்தாவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
புதுவையை அடுத்த வம்பாகீரப் பாளையத்தை சேர்ந்த 90 வயது முதியவர் ராமசந்திரன். மகனும், மருமகளும் இறந்து விட்டதால் தனது பேத்தி கலைசெல்வியுடன் (21) வசித்து வந்தார். கலைசெல்வி தணியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார்.
 
இந்நிலையில் தாத்தாவும், பேத்தியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒதியஞ்சாலை போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது.
 
அதில் தங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல என்றும் வாழபிடிக்காமலேயே தற்கொலை செய்வதாக எழுதியுள்ளனர்.
 
அதோடு தங்களின் இறுதி சடங்கை எளிமையாக நடத்த போதுமான தொகை பீரோவில் இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறும உருக்கமுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
ஒரே நேரத்தில் தாத்தாவும், பேத்தியும் தற்கொலை செய்துள்ளது அந்த பகுதியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments