Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. புதிய தேதிகள் என்ன?

Siva
வெள்ளி, 10 மே 2024 (08:01 IST)
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுகள் ஜூன் 6 ஆம் தேதி முதல் நடத்தப்படும் எனவும், நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்குகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் இந்த தேதி மாற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லூரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளதாகவும், ஆதலால் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஜூன் 6 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments