Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Webdunia
புதன், 30 மார்ச் 2016 (08:52 IST)
பொறியியல் படிப்புக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்துள்ளார்.


 

 
கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் பி.இ., பி.டெக். சேருவது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்த ஆண்டு மாணவர்கள் நலன் கருதி, முதன் முதலாக விண்ணப்ப படிவங்கள் அச்சிடப்படவில்லை. அதற்கு மாறாக, மாணவர்கள் ஆன்-லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். என்ஜினீயரிங் விண்ணப்பம் குறித்த அறிக்கை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும்.
 
ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் பிளஸ் -2 முடித்த மாணவ-மாணவிகள் ஆன்-லைனில் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்கலாம்.
 
மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்-லைனில் தங்கள் பெயர், தந்தை பெயர், வயது, முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.
 
ஆனால், பிளஸ் -2 தேர்வு முடிவு வெளிவந்த உடன், அதில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
 
பின்னர், "செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன்" என்ற முகவரிக்கு ரூ.500 க்கு டி.டி. எடுக்க வேண்டும். மாணவர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் ரூ.250-க்கு டி.டி. எடுத்தால் போதும்.
 
இந்த டி.டி. எண்ணை அந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, அதை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டுள்ள அனைத்து சான்றுகளின் நகல்களும் எடுத்து சேர்த்து "செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600025" என்ற முகவரிக்கு பிளஸ் -2 தேர்வு முடிவு வெளியிட்ட 10 நாட்களுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். 
 
நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.
 
வீட்டில் இருந்தபடி ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும் மையங்களில் உள்ள ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்த மையங்களின் உதவியை விண்ணப்பிக்க நாடலாம். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments