Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை வழக்கு..! உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் செந்தில் பாலாஜி..!!

Senthil Velan
புதன், 6 மார்ச் 2024 (15:17 IST)
அமலாக்கத்துறை வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
7 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் அவர், பலமுறை ஜாமின் கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தும், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. 
 
தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  

ALSO READ: கடலுக்கு செல்லாத பழவேற்காடு மீனவர்கள்..! புயல் நிவாரணம் வழங்கவில்லை என புகார்.!!
 
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கினால் கல்வி சான்றிதழ் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு..!

16 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. குழந்தை பிறந்த போது பலியான பரிதாபம்.. பெற்றோர் அதிர்ச்சி..!

வெளிநாட்டினர் வீடு வாங்க தடை.. ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு.. கூட்டணிக்கு மிரட்டலா?

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments