Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமானுவேல் சேகரின் 61வது நினைவு தினம்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (12:54 IST)
இமானுவேல் சேகரின் 61வது நினைவுதினம் ராமனாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சந்தைப் பேட்டை பகுதியில் இன்று  நடக்கவுள்ளது.

இமானுவேல் சேகரின் நினைவுதினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அமைப்பாளர்கள் போன்றோர் கலந்து கொள்ள உள்ளனர். அதன் பொருட்டு அங்கு பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு சுமார் 5000 ம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க மோப்ப நாய்களும், வெடிகுண்டு நிபுணத்துவமுள்ள போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் பரமக்குடி பகுதியைச் சுற்றிலும் 75 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு நேற்றைய ஒத்திகையின் போது ட்ரோன் வகை கண்காணிப்பு கேமராக்களும் பறக்கவிடப்பட்டன.அப்போது தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆங்காங்கே பல பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டுள்ளது .

இந்த அஞ்சலி நிகழ்ச்சி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments