Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதா கோவிலில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி : நெல்லையில் பரிதாபம்

மாதா கோவிலில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி : நெல்லையில் பரிதாபம்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (13:19 IST)
நெல்லையில் நடைபெற்ற மாதா கோவில் விழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



நெல்லை மாவட்டம் பரதர் உவரியில் ஒரு மாதா கோவில் உள்ளது. அங்கு தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று காலை சப்பர பவனி வலம் வந்தது.

அந்த சப்பரத்தை 20 பேருக்கும் மேலானோர் இழுத்து சென்றனர். அப்போது தாழ்வாக தொங்கிய மின்கம்பி மீது சப்பரம் மோதியது. இதில், சப்பரத்தை இழுத்து சென்ற 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments