நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு தமிழகத் தேர்தல் ஆணையம் இதுவரை ரூ.210 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்தானதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ் லக்கானி, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜுன் 19-ஆம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டசபை உறுப்பினர் சீனிவேல் காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதை சட்டமன்ற செயலர் அறிவிப்பார் என்றும். தமிழகத் தேர்தலுக்காக இதுவரை ரூ.210 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக ரூ.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும், இன்று அரசிதழில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்தது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது என ராஜேஷ் லக்கானி கூறினார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!