தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணும் இடங்கள்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நடந்துமுடிந்த, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மே 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.