Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள ரவுடிகளோடு கம்பேர் பண்ணாதீங்க! – ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (09:40 IST)
தமிழக விவசாயிகளை ரவுடிகளோடு ஒப்புமைப்படுத்தி பேச வேண்டாம் என மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டங்களில் பேசும் மு.க.ஸ்டாலின் அடிக்கடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று குறிப்பிடுவதை, திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ‘நானும் ரௌடிதான்’ என கூறும் நகைச்சுவை காட்சியோடு ஒப்புமைப்படுத்தி பேசி வருகிறார்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”தமிழக விவசாயிகளை அரசு குழந்தைபோல பாதுகாத்து வருகிறது. நான் ஒரு விவசாயி என்று கூறுவதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பல மேடைகளில் ‘நானும் ரவுடிதான்’ என கூறிக்கொள்வதாக இகழ்வாக பேசி வருகிறார். உணவிடும் விவசாயிகளை ரௌடிகளோடு ஒப்புமைப்படுத்தி ஸ்டாலின் கீழ்தரமாக பேசி வருகிறார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments