பயப்படதீங்க இன்னும் 2 -3 நாள் தான்... தைரியம் சொல்லும் ஈபிஎஸ்!!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (15:21 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். 
 
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் பேசியது பின்வருமாறு, கொரோனா நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே தமிழக அரசு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஊரடங்கை நீட்டித்துவிட்டது. 
 
அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். 
 
ஊரடங்கால் தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஒரு பலி ஆடு!.. பின்னால் இருப்பது அந்த கட்சி!.. ஜேம்ஸ் வசந்தன் காட்டம்!...

கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து திமுக என்ன முடிவெடுக்கும்?

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விசிகவும் விலகுமா? வலுவாகுமா தவெக கூட்டணி?

வலுக்கும் காங்கிரஸ் - திமுக சண்டை.. உடைகிறதா கூட்டணி? அதிமுக கூட்டணிக்கு லாபமா?

நயன்தாரா வந்தா இன்னும் கூட்டம் வரும்!.. விஜயை கலாய்க்கும் செல்லூர் ராஜூ!..

அடுத்த கட்டுரையில்
Show comments