Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் ஆஜர்.. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

Siva
புதன், 22 மே 2024 (14:40 IST)
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம், 2வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனதாகவும், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியானது.
 
 ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் தனது வழக்கறிஞரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சலீம் இன்று ஆஜரானார். ஏற்கனவே நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆஜராகியுள்ள நிலையில் இன்றும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜரான சலீமிடம் அமலாக்கத்துறை  அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்  ஜாபர் சாதிக் மனைவி ஹமீனா என்பவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments