Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம்: மின்வாரியம் உத்தரவு!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (15:09 IST)
தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முதல் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்துார் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெரு வீதிகளில், கேபிள் முலம் மின் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன!
 
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர் திருவிழாவில், தேரின் மேல் பகுதியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் தேர் செல்லும் பாதைகளில், மின் கம்பத்திற்கு மாற்றாக, தரை அடி கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
 
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்‌ திருக்கோவில்‌, ஸ்ரீரங்கம்‌ அருள்மிகு ஸ்ரீரங்கநாதர்‌ திருக்கோவில்‌, கோயம்புத்தூர்‌ அருள்மிகு கோணியம்மன்‌ திருக்கோவில்‌, அவிநாசி அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர்‌ திருக்கோவில்‌, திருப்பரங்குன்றம்‌.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்‌, திருச்செங்கோடு அருள்மிகு, அர்த்தநாரீஸ்வரர்‌ திருக்கோவில்‌, கரூர்‌ தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீகல்யாண
'வெங்கடரமண சுவாமி திருக்கோவில்‌ மற்றும்‌ காஞ்சிபுரம்‌ அருள்மிகு ஏகாம்பரீஸ்வரர்‌ "திருக்கோவில்‌, அருள்மிகு வரதராஜப்‌ பெருமாள்‌ திருக்கோவில்‌, அருள்மிகு காஞ்சி
காமாட்சி அம்மன்‌ திருக்கோவில்‌ ஆகிய திருத்தலங்களிலுள்ள தேரோடும்‌ பாதைகளில்‌ மேலே செல்லும்‌ மின்கம்பிகள்‌ அனைத்தும் புதைவடத்தடங்களாக
மாற்றியமைக்கப்படும்‌.
 
இத்திருத்தலங்களில்‌ நடைபெறும்‌ தேரோட்டத்தின்‌ போது பல்வேறு, பகுதிகளில்‌ ஒருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்‌ வருகை புரிவதால்‌, இவ்வாறு மேல்நிலை மின்‌ கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைப்பதன்‌ மூலம்‌ பொது, மக்களுக்கு தடையில்லா மின்சாரம்‌ வழங்கப்படுவதுடன்‌, மின்‌ விபத்துக்களும்‌ முற்றிலும்‌ தடுக்கப்படும்‌."
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments