Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு: தொண்டர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (17:22 IST)
திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வரும் 9ஆம் தேதி பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் இந்த பதவிக்கு போட்டியிடுவோர் இன்று விண்ணப்பிக்கலாம் எனவும் திமுக தலைமை அறிவித்து இருந்தது தெரிந்ததே
 
இதனையடுத்து இன்று காலை திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் சார்பிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு சார்பிலும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். திமுக பொருளாளர் பதவிக்கு எ.வல்.வேலு, கனிமொழி, ஆ ராசா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டபோதிலும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் முடிவடைந்ததால் துரைமுருகன் தவிர வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கும், டி.ஆர்.பாலு தவிர வேறு யாரும் பொருளாளர் பதவிக்கும் விண்ணப்பிக்கவில்லை. 
 
எனவே துரமுருகன் திமுக பொதுச்செயலாளராகவும், டி.ஆர்.பாலு திமுக பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments