Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏண்டா இங்க குடிக்கிறீங்கன்னு கேட்ட காவலர் அடித்துக் கொலை

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (12:21 IST)
சென்னையில் காவலர் ஒருவர் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த  ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் வேலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். 
 
இந்நிலையில் நேற்று பணி முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பிய போது, பள்ளி வாகனத்தில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனால் மோகன்ராஜ் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த் அந்த போதை ஆசாமிகள், காவலரை மதுபாட்டில்களால் தலையில் தாக்கியுள்ளனர். மேலும் பாட்டிலை உடைத்து அவரது கழுத்தில் குத்தியுள்ளனர்.
 
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலே பலியானார். அவரை அந்த போதை ஆசாமிகள் ரோட்டில் வீசிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோகன்ராஜை கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொல்லப்பட்ட மோகன்ராஜுக்கு அன்பு ரோஜா என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும், அவினாசி, அஜயா என்ற மகள்களும் உள்ளனர். மோகன்ராஜ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments