Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை நிறுத்தி விட்டு சரக்கடிக்க சென்ற ஓட்டுநர்

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (15:40 IST)
பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு மது அருந்துவதற்காக சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனரை போலீசார் தேடி வருகிறார்கள்.


 

 
நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது. அதில் 8 பெண்கள் உட்பட மொத்தம் 32 பயணிகள் செய்தனர். இரவு 11 மணி அளவில் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, ஓட்டுனரும் நடத்துனரும் அங்கிருந்து சென்று விட்டனர். நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.
 
அவர்கள் இருவரும் மது அருந்த சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர். அப்போது பயணிகள் அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த அவர்கள் வண்டியை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
 
இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அதன்பின் விடியற்காலை 4 மணியளவில் வேறொரு ஓட்டுனரால், அந்த பேருந்து இயக்கப்பட்டது. இதுபற்றி போலீசாரிடம் புகார் கூறப்பட்டது. 
 
இதையடுத்து சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தேடி வருகிறார்கள். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை..! வி.சி.க. - காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments