Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 14: தமிழகம் முழுக்க மருந்து கடைகள் ஸ்டிரைக்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (01:39 IST)
அக்டோபர் 14ஆம் தேதி அன்று இந்தியாவில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.
 

 

இது குறித்து, சேலத்தில், தமிழ்நாடு மருந்து வணிகர்களின் சங்கத்தின்  மாநில தலைவர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை தடை செய்ய வலியுறுத்தி அக்டோபர் 14 ஆம் தேதி திட்டமிட்டபடி தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் முடப்படும்.
 
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. அது போன்று அனுமதி அளித்தால், போலி மருந்துகளின் விற்பனைஅதிகரிக்கும். ஊக்கமருந்து, கருத்தடை மருந்து உள்ளிட்ட மருந்துகளும் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
 
எனவே, ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்க கோரி அக்டோபர் 14ஆம் தேதி, அகில இந்திய அளவில் நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்களின் சங்கமும் பங்கு கொள்ளும் என்றார்.
 
இந்த போராட்டம் காரணமாக, தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்பட்டிருக்கும். 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments