சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம்.. சோதனை ஓட்டம் தொடங்கியது..!

Siva
வியாழன், 26 டிசம்பர் 2024 (11:20 IST)
சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்பட இருக்கும் நிலையில், சோதனை ஓட்டம் தொடங்கியதாக தகவல் உள்ளது.

சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மூன்று ரயில் பெட்டிகளை கொண்ட 80 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியதாகவும், இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில் கடந்த அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் மணிக்கு 10 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை சோதனை செய்யப்படும். அதன் பின்னர், 60 கிலோமீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை சோதனை மேற்கொள்ளப்படும் என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேக்கிங் சிஸ்டம் உள்பட அனைத்தும் சோதனை செய்த பிறகு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பூந்தமல்லி-போரூர் இடையே டிரைவர் இல்லாமல் மெட்ரோ பயணிகள் சேவை தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments