பேருந்தை ஓட்டும்போதே மாரடைப்பு வந்து ஓட்டுனர் மரணம் – பயணிகளைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் !

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (07:57 IST)
சென்னை வேளச்சேரியில் பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும் போதே ஓட்டுனர் ராஜேஷ் கண்ணாவுக்கு மாரடைப்பு வந்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் கண்ணா. இவருக்கு வயது 31. இவர் கோயம்பேடு –சிறுசேரி பேருந்து மார்க்கத்தில் பேருந்து ஓட்டி வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று மதியம் கோயம்பேட்டில் இருந்து சிறுசேரி செல்லும் பேருந்தை இயக்கியுள்ளார்.

பேருந்து வேளச்சேரி அருகே சென்றபோது அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்த அவர் முயன்றுள்ளார். இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த சில கார்களின் மேல் அவர் மோதியுள்ளார். இதனால் கார்களில் சிறு உராய்வுகள் ஏற்பட்டன. ஆனால் எந்த உயிர்ச்சேதமும் இல்லை. பேருந்தில் மயங்கிக் கிடந்த ராஜேஷ் கண்ணாவை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தனக்கு மாரடைப்பு வந்தபோதும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய டிரைவரின் மனிதநேயமிக்க செயலால் பயணிகள் நெகிழ்ந்து போயுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments