Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடை கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஆடை கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2016 (11:57 IST)
கோயில்களுக்குச் செல்ல ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததற்கு இடைக்காலத்தடை வித்தித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.


 

 
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து நவம்பர் 26 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி, ஆடைக்கட்டுப்பாடு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஜீன்ஸ், லெகின்ஸ், அரைக்கால் சட்டி உள்ளிட்டவற்றை அணிந்து கோயிலுக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில், இந்த ஆடை கட்டுப்பாடு தனிமனித உரிமையில் தலையிடுவதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆடை கட்டுப்பாட்டிற்கு வரும் 18 ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments