திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவர்களை, அவர்களே அழித்துக் கொள்வார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், திமுக தலைவர் கருணாநிதியும் பேசியுள்ளனர்.
அவர்கள் பேசும்போது, திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளனர். அது உண்மைதான். திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது. அவர்களே, அவர்களை அழித்துக் கொள்வார்கள் என்றார்.