Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனைகளை குறைக்க கூடாது: டாக்டர் ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:38 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனை மருத்துவர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் பாராட்டியுள்ளனர். பரிசோதனை அதிகரிக்க அதிகரிக்க தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து கூறியதாவது: 
 
தமிழ்நாட்டில் தினசரி  கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5000-க்கும் கீழ் குறைந்தாலும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கீழ் குறையாமல் தொடர்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நடவடிக்கை!
 
தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை இதே அளவில் தொடர வேண்டும். கொரோனா பரவல் தீவிரமடைகிறதா? என்பதை கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறை சோதனைகள் தான். அவை குறைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments