Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணப்பட்டுவாடா ஆவணங்களில் முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்களின் பெயர்கள்

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (17:15 IST)
ஆர்.கே.நகர் தொகுதில் பணம் பட்டுவாடா குறித்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அதில் முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.





 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 85 சதவீத நபர்களுக்கு ரூ.4000 வீதம் பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்த ஆவணம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணமா அல்லது பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்கான ஆவணமா என்பது குறித்து தெரியவில்லை.
 
ஆனால் இந்த ஆவணத்தில் முதல்வர் பழனிச்சாமி, செங்கோட்டையன், தங்கமணி, சீனிவாசன், ஜெயக்குமார் உள்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் விஜய் பாஸ்கர் வீட்டில் மற்றும் எழும்பூர் விடுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த ஆவணங்களை கொண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 85 சதவீத மக்களுக்கு தலா ரூ.4000 பட்டுவாடா செய்ய முடிவு செய்துள்ளனர். மொத்தம் ரூபாய் 89 கோடி 65 லட்சம் 85 ஆயிரம் தொகை அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அமைச்சர்களும் ஒரு தொகையை பெற்றத்தற்கான, அவர்களின் கையெழுத்து அதில் உள்ளது. 
 
தற்போது இந்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யானது என அதிமுக தரப்பில் தெரிவித்துள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments