Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சையா? மருத்துவர்கள் விளக்கம்..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (12:42 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 
 
இதனை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள்  அவருக்கு தேவைப்பட்டால் மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர் 
 
காலில் உள்ள நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்ததால் அவருக்கு அடிக்கடி கால் மரத்து போவதாகவும் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.  
 
இதய சிகிச்சை பிரிவு துறை தலைவர் மனோகரன் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments