Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் உடல் சிதைந்து வருகிறதா?: மருத்துவர் விளக்கம்

ராம்குமார் உடல் சிதைந்து வருகிறதா?: மருத்துவர் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (18:49 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


 
 
ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவரை அனுமதிக்க வேண்டும் என ராம்குமாரின் தந்தை தரப்பில் கோரப்பட்டுள்ளதால். ராம்குமாரை 30-ஆம் தேதி வரை பிரேத பரிசோதனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து ராம்குமார் உடலில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், உடல் சிதைந்து வருவதாகவும் வதந்திகள் பரவியது. இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
 
அதில், ராம்குமார் உடல் சிதைய ஆரம்பித்துள்ளதாக வரும் செய்திகளை மருத்துள்ளனர். ராம்குமார் உடல் அதிக குளிரூட்டப்பட்ட தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. யாரும் அனுமதிக்கப்படாத அந்த அறையில் கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை.
 
ராம்குமாரின் உடல் தசைகள் சுருங்காமலும், சிதையாமலும் இருக்கும். இன்னும் பல நாட்கள் உடலை பாதுகாக்கும் நவீன வசதிகள் உள்ளன. எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக ஓட்டுக்கள் எங்கே? டெபாசிட் வாங்குமா நாதக?

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments