Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு.. கைதான அரசு மருத்துவருக்கு சில நிமிடங்களில் நெஞ்சுவலி..!

Mahendran
திங்கள், 13 மே 2024 (11:24 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர் கைதான நிலையில் கைதான சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி என்ற பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர்  சுகன்யா என்பவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது 
 
மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறு சுகன்யாவை அவர் வலியுறுத்திய நிலையில் ஒருசில மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகன்யாவின் புகாரை பெற்று சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்தனர் 
 
அப்போது மருத்துவர் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்