Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவரின் மட்டமான செயல் : சிக்கித்தவித்த செவிலியர்கள்!!!

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (11:58 IST)
திருவாரூரில் மருத்துவர் ஒருவர் 15 நர்சுகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வூரை சுற்றியுள்ள மக்கள் ஏராளமானோர் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இங்கு மணவழகன் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
 
மணவழகன் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 செவிலியர்கள் இவனின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் இருந்துள்ளனர்.
 
ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த இவர்கள் உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அந்த மருத்துவர் நர்சுகளிடம் அத்துமீறியது தெரிய வந்தது. 
 
இதையடுத்து இதுகுறித்து மணவழகன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸார் மணவழகனை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்